search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம விலங்கு"

    • வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து
    • கிராம மக்கள் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.

    இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் முருகன்குட்டை கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்தது. கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேலும் 3 ஆடுகள் பலியானது.

    கிராம மக்கள் அச்சம்

    தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்.

    வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மதனாஞ்சேரி, சங்கத்து வட்டம் மற்றும் முருகன்கு ட்டை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை யினர் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கிராமத்தில் சுற்றி திரியும் மர்ம விலங்கை விரைந்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • பாப்பாத்தி அப்பகுதியில் 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.
    • மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி சனி சந்தை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மனைவி பாப்பாத்தி (50). இவர் அப்பகுதியில் கீத்துப் பின்னும் தொழில் செய்து கொண்டு 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை செம்மறியாடுகளை தனது வீட்டு அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை ஆட்டுக்கொட்டைக்குச் சென்று பார்த்த பொழுது 4 செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனப்பகுதி அருகில் உள்ளதால் வனவிலங்குகள் ஏதேனும் கடித்துள்ளதா? அல்லது மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இதுகுறித்து வருவாய் துறைக்கும், வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை கோவிலை சுற்றியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • இதில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போனது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காருவள்ளி ஊராட்சியில் வெங்கட்ரமண கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை கோவிலை சுற்றியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனி என்பவர் தனது ஆடுகளை மேச்சலுக்காக அவிழ்த்து விட்டதாக தெரிகிறது. இதில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போனது. இதையடுத்து ஆடுகளை தேடியபோது அங்குள்ள கரட்டு பகுதியில் 3 ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதை பார்த்து சீனி அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக சீனி டேனிஷ்பேட்டை அலுவலர் தங்கராஜூக்கு தகவல் கொடுத்தார். மர்ம விலங்கு நடமாட்டம் இருந்தால் கால்தடம் பதிந்து இருக்கும். அப்படி இருந்தால் இந்த பகுதியில் முகாமிட்டு மர்ம விலங்கை பிடித்து விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் கடுமையான பீதி அடைந்து உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நைனார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் சுமார் 15 கால்நடைகளை பட்டியில் வழக்கம்போல் அடைத்துள்ளார். இதனை அடுத்து நள்ளிரவில் பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் கடித்து கொடூரமாக கடித்ததில் 13 ஆடுகள் ரத்த காயத்துடன் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தன.

    இன்று காலையில் இதனைக் கண்ட ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், வனத்துறை வனவர் சத்தியாபிரியா, வனகாப்பளர் வேல்முருகன், பாபு, அனுமனந்தல் கால்நடை மருத்துவர் சரண்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆடுகளை கடித்த வனவிலங்கு எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 4 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.
    • அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆட்டு பட்டியில் ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று இரவு ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 4 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.

    இதேபோல் நேற்று முன்தினம் அருகில் உள்ள செந்தில்குமார் என்பவரின் 7 ஆடுகள் இதேபோல் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.

    அடுத்தடுத்து 2 நாட்களில் 11 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.

    இது குறித்து சித்தோடு போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்துகின்றனர்.

    கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள் கடித்ததா? அல்லது வேறு ஏதேனும் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா? எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் உயிரிழந்தன. அப்போது வனத்துறையினர் கண்காணிப்பு கேமிரா பொறுத்தி கண்காணித்தனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராமத்தினர் கூறி இருந்தனர். ஆனால் கண்காணிப்பு கேமிராவில் அப்போது தெளிவான உருவம் பதிவாகவில்லை.

    ஒரு மாத காலத்திற்கு பின் மீண்டும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம விலங்கு கடித்து குதறியதில் 11 ஆடுகள் பலியாகி இருப்பது தெரியவந்தது.
    • மேலும் ஆடு, கோழி ரத்தத்தை ருசித்ததால் அந்த மர்ம விலங்கு மீண்டும் மீண்டும் எங்கள் பகுதிக்குள் வந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    ஈரோடு, மார்ச். 19-

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (56) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகில் ஆட்டுப்பட்டி அமைத்து 50 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இவர் வழக்கம் போல் நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு இன்று அதிகாலை ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.

    இதனால் உடனடியாக பட்டிக்கு சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் 8 ஆடுகள், 3 ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்தன. மர்ம விலங்கு கடித்து குதறியதில் 11 ஆடுகள் பலியாகி இருப்பது தெரியவந்தது. அதைப்பார்த்து விவசாயி வெங்கடாஜலம் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் கடிபட்ட நிலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. இச்சம்பவம் குறித்து சித்தோடு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மர்ம விலங்கு ஒன்று பட்டிக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி உள்ளது தெரிய வந்தது.

    இதுகுறித்து சித்தோடு போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பதிவாகியிருந்த மர்ம விலங்கின் கால் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்குள் இதேபோன்று மர்ம விலங்கு கடித்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியாகி இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி, அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை அந்த மர்ம விலங்கு எந்த விலங்கு என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறும்போது,

    கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதிக்குள் மர்ம விலங்கு ஒன்று புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. அது என்ன விலங்கு என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் மற்ற கால்நடைகளை வளர்த்து வருபவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் ஆடு, கோழி ரத்தத்தை ருசித்ததால் அந்த மர்ம விலங்கு மீண்டும் மீண்டும் எங்கள் பகுதிக்குள் வந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    இதுவரை மர்ம விலங்கால் கடிபட்டு இறந்த ஆடு-கோழிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு அந்த மர்ம விலங்கை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 3 ஆடுகளை கடித்து கொன்றது
    • 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டுள்ளனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கந் திலி யூனியன் சிம்மணபுதூர் பஞ். பழனி வட்டத்தை சேர்ந்தவர் கோவிந் தராஜ். விவசாயி.

    இவர் நிலத்தின் அருகே கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை தனது விவசாய நிலத்தில் 3 ஆடுகளை மேய்க்க விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து நிலத்துக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக வனப்பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று ஆடுகளை வேட்டையாடிகிறது. தற்போது பகல் நேரங்களிலேயே உலா வர தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆடுகளைக் கடித்தது வெறிநாய், செந்நாய், சிறுத்தையா என்பது தெரியவில்லை.

    இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் முடங்கியுள்ளனர்.

    ஆடுகளை வேட்டையாடும் வனவிலங்குகளை கண்டறிந்து, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் வனத் துறையினரிடம் கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆடுகள் இறந்த பகுதியில் ஆய்வு செய்த போது அதில் நாய்களின் கால் தடம் மட்டுமே பதிவாகியுள்ளது. இருப்பினும் ஆடுகளை வேட்டை யாடுவது எந்த விலங்கு என கண் டறிய வனசரக அலுவலர் பிரபு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.

    மேலும், இரவு நேரங்களில் துல்லியமாக பதிவு செய்யும் அதி நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்கப்படும் என்றனர்.

    • முன்பு பட்டியில் இருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தது.
    • இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எக்கூர் கிராமத்தில் உள்ள திருமணி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பட்டியில் இருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தது.

    இந்த நிலையில் அதே பகுதியில் நேற்று பக்தவாசலம் என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கட்டிவைத்தியிருந்த 1 மாட்டை மர்ம விலங்கு கடித்து இறந்துள்ளது.

    இந்த நிலையில் பழனி வட்டத்தில் உள்ள பூங்காவனம் என்பவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று பிற்பகல் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்த 1 ஆடு மர்ம விலங்கு கடித்து பலியானது. இச் சம்பவங்களால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பீதி நிலவுகிறது.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொட்டகையில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்துள்ளார்.
    • 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன.

    பாலக்கோடு,

    பாலக்கோடு அடுத்த கரகத அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியப்பன்.

    இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்துள்ளார்.

    அப்போது 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முனியப்பன் இதுகுறித்து உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்த ஆடுகளை பார்வையிட்டு விலங்குகளின் கால் தடம் குறித்தும் அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் மர்ம விலங்குகளின் நடமாட்டம் தெரிகிறதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜ், கரகத அள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் எனவும், விலங்குகள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டு கொண்டுள்ளார். 

    • கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம விலங்கு பிடித்து சென்று கடித்து கொன்றது. மர்மவிலங்கு கடித்த இவரது நாய் இறந்துகிடந்தது,
    • மர்ம விலங்கின் நடமா ட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்   கடந்த சில நாட்களுக்கு முன்பு காரனூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம விலங்கு பிடித்து சென்று கடித்து கொன்றது    இதனை தொடர்ந்து விளை நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அ தன்படி விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமே ஷ்சோமன், கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராஜி, வனவர் சின்னதுரை ஆகியோர் காரனுாரில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட வயல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

    . அங்கு விளைநிலத்தில் பதிந்திருந்த மர்மவிலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர்  மேலும் மர்ம விலங்கின் எச்சத்தை சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதாகவும், இரவு நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்  இதேபோல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மர்ம விலங்கு சுற்றி திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கால்நடைகளை பாதுகா ப்பாக வைத்து கொள்ளவும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது   கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வயல் பகுதிகளில் மர்ம விலங்குகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இந்த விலங்கு செந்நாய், சிறுத்தை, கரடி, காட்டுப் பூனை ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்   மர்ம விலங்கின் நடமா ட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது.
    • இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்கு அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடி வருவதும் தொடர்கதை ஆகிய வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது. இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் அளித்தனர்.


    இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. புலி அல்லது சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வந்து நாயை வேட்டையாடி இருக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    • மர்மவிலங்குகள் கடித்தும் சில ஆடுகளை இழுத்து சென்றும் விடுகின்றது.
    • பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆடு மாடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ஆடுகளை மர்மவிலங்குகள் கடித்தும் சில ஆடுகளை இழுத்து சென்றும் விடுகின்றது. ஜமாபந்தியில் இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்மவிலங்குகள் கடித்து கொன்றுள்ளன.

    இந்தநிலையில் நேற்று இரவு 2 விவசாயிகளின் நிலங்களில் உள்ள ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றுள்ளன. சில ஆடுகளை இழுத்தும் சென்றுள்ளது. இதையடுத்து மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×